777 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கோவை மேயர் அவர்கள் வழங்கினார்கள் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 20 August 2024

777 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கோவை மேயர் அவர்கள் வழங்கினார்கள்



கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்லடம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள், சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கடந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் உள்ளிட்ட 777 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்கள். 



மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன்,உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் திரு.அன்பழகன், மண்டலக்குழுத் தலைவர்கள் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்), மாநகர நல அலுவலர் (பொ) மரு.கே.பூபதி, மாநகர கல்வி அலுவலர் திரு.குணசேகரன், நகரமைப்பு அலுவலர் திரு.குமார், மண்டல உதவி ஆணையர்கள் திருமதி.சந்தியா(மேற்கு), திரு.செந்தில்குமரன்(மத்தியம்), திரு.முத்துசாமி(கிழக்கு), திருமதி.ஸ்ரீதேவி(வடக்கு), திரு.இளங்கோவன் (தெற்கு) (பொ), திருமதி.மோகனசுந்தரி (நிர்வாகம்), மாமன்ற உறுப்பினர்கள் திரு.அஸ்லாம் பாஷா, திரு.குணசேகரன், திருமதி.சித்ரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் (20.08.2024).



தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சுதன்.

No comments:

Post a Comment

Post Top Ad