கோவை புதூரில் குடோன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு
கோவையை அடுத்த கோவைப்புதூர் அறிவிலி நகர் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல் என்பவர் மகன் மணிகண்டன் இவர் பில்டிங் வேலை செய்து வருகிறார் கடந்த இரண்டு நாட்களாக ஈச்சனாரி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் அந்த சமயத்தில் வெல்டிங் தீப்பொறி சிந்தியது அருகில் இருந்த எண்ணெய் மீது பட்டு தீ பிடித்தது இதில் ஏனில் நின்று வேலை செய்து கொண்டிருந்த மணிகண்டன் மீதும் தீ பிடித்தது இதில் மணிகண்டன் ஒரு பக்கமாக பலத்த தீக்காயம் ஏற்பட்டது உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் இந்நிலையில் மணிகண்டன் அளித்த புகாரில் போதிய உபகரணங்கள் இல்லாமல் பணியமற்றிய குடோன் உரிமையாளர்கள் மீது முகமது சபீர் மற்றும் அகமது பைசல் ஆகிய இருவர் மீதும் போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதிஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment