மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை கோவை கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் 33 வயதான சுதீஷ் இவர் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்த தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது இதன் காரணமாக அவர் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் நேற்று முன்தினம் சுதீஷ் வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார் அவரை அவரது மனைவி சத்தம் போட்டு உள்ளார் இதனால் மணமுடைந்த சதீஷ் வீட்டு பாத்ரூமில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு வெகுநேரமாகியும் வெளிவரவில்லை பின்னர் அருகில் உள்ள நபர்களுடன் உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார் உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர் இதுகுறித்து ஆர் எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமைச் செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment