கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் டிட்கே சார்பில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தொழிற்சாலை அமைக்கப்படும் இடத்தையும் நேற்று கலெக்டர் கரேந்திர குமார் திடீரென ஆய்வு செய்தார் அப்போது தொழிற்சாலையின் வழித்தடத்தை குறித்தும் கேட்டறிந்தார் முன்னதாக கள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பாப்பம்பட்டியில் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்தார் அப்போது ரேஷன் கடையில் பொருள்களின் தரத்தையும் சோதனை செய்தார் பொதுமக்களிடம் சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டு அறிந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment