விரக்தியில் இளைஞர் தற்கொலை. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பகத்சிங் நகரை சேர்ந்த சூர்யா 19 வயது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார் இந்நிலையில் கடன் தவணையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார் எனவே சூர்யா தனது அம்மாவிடம் கடனை கட்டுவதற்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார் அவருடைய அம்மா மறுத்துவிட்டார் இதன் காரணமாக சூர்யா மன வேதனையுடன் காணப்பட்டார் இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து சூர்யா கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டுக் கொண்டார் இதனைப் பார்த்த அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக சூர்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment